இலங்கை
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராக ரணிலுக்கு அழைப்பாணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராக ரணிலுக்கு அழைப்பாணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறித்து அவர் அளித்த வாக்குமூலம் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
அதன்படி, அவர் வௌியிட்ட அறிக்கையில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களுடன் ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.