இலங்கை
வீடொன்றில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்

வீடொன்றில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்
நுங்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாதென்ன வீடொன்றின் அறையிலிருந்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (10) விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாளிகாதென்ன, வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்த மேலதிக விசாரணைகளில் நுங்கமுவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.