Connect with us

சினிமா

ஹிருத்திக் ரோஷனுடன் இணையும் பிரீத்தி ஜிந்தா..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்பிரைஸ்..!

Published

on

Loading

ஹிருத்திக் ரோஷனுடன் இணையும் பிரீத்தி ஜிந்தா..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்பிரைஸ்..!

இந்திய சினிமாவில் சிறப்பான திரைப்படங்களின் முன்னோடியாக விளங்கிய ‘கிரிஷ்’ படத்தின் எதிர்பார்ப்பு மீண்டும் மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ‘கிரிஷ்’ திரைப்படம், இந்தியாவில் சூப்பர் ஹீரோ ஹிருத்திக் ரோஷனை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றது.அதன் வெற்றியை தொடர்ந்து ‘கிரிஷ் 2’ மற்றும் ‘கிரிஷ் 3’ படங்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, ‘கிரிஷ் 3’ கடந்த 2013ம் ஆண்டு வெளியானதுடன் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைக் கண்டது.இப்போது, 10 வருடங்களுக்கு பிறகு, ‘கிரிஷ் 4’ குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்த ஒரு செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது: ‘கிரிஷ் 4’ படத்தை ஹிருத்திக் ரோஷன் தான் இயக்கப் போகிறார்.தற்பொழுது ஹிருத்திக் ரோஷன் தன் வாழ்க்கையில் முதல் முறையாக நடித்து இயக்கும் பெரும் முயற்சியாக ‘கிரிஷ் 4’ திட்டமிடப்பட்டிருக்கின்றது. இதுவரை ராக்கேஷ் ரோஷன் இயக்கியிருந்த நிலையில் இப்பொழுது  தாயார் பின்புலத்துடன் ஹிருத்திக் தான் இயக்குநர் பொறுப்பேற்கிறார். சமீபத்திய பேட்டியில் “கிரிஷ் 4 என்பது என் கனவுகளின் விரிவாக இருக்கும். நான் ரசிகர்களுக்கு என் முழு இதயத்தையும், திறமையையும் கொடுக்க ஆசைப்படுகிறேன்.” என்று கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் ‘கோய் மில்காயா’, ‘கிரிஷ்’ போன்ற படங்களில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்த பிரீத்தி ஜிந்தா, மீண்டும் ‘கிரிஷ் 4’ படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன