Connect with us

இலங்கை

இரு இளைஞர்களின் உயிரை பறித்த பஸ் ; பொலிஸாரிடம் சிக்கிய சாரதி

Published

on

Loading

இரு இளைஞர்களின் உயிரை பறித்த பஸ் ; பொலிஸாரிடம் சிக்கிய சாரதி

குருணாகல் – புத்தளம் வீதியில் லக்மல் உயன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று  (11) மாலை இடம்பெற்றுள்ளது.

Advertisement

குருணாகலில் இருந்து வாரியப்பொல நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

21 வயதுயைடய இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதனையடுத்து பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன