Connect with us

இலங்கை

ஈவிரக்கமின்றி தரம் 3 மாணவர்களை உலோக நடாவினால் தாக்கிய ஆசிரியர்!

Published

on

Loading

ஈவிரக்கமின்றி தரம் 3 மாணவர்களை உலோக நடாவினால் தாக்கிய ஆசிரியர்!

கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள  பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கொடூரமாகத் தாக்கியமை குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஆண்கள் பாடசாலையொன்றின் வகுப்பாசிரியர் ஒருவர் தரம் 3 மாணவர்களை உலோக நடாவினால் அடித்து தண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சமீபத்தில் ஒரு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதன்படி, விசாரணைகளைத் தொடங்கியுள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, தண்டனைக்கு உள்ளான 7 வயது மாணவர்கள் இருவரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் பெற்றோரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

சந்தேகத்திற்குரிய ஆசிரியர் பதுளை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள ஆசிரியரைக் கைது செய்ய விசேட பொலிஸ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன