Connect with us

இலங்கை

கிளிநொச்சி பிரபல பாடசாலையில் சிறுவர்களை சீரழிக்கும் நபர்; காப்பாற்ற நினைக்கும் தமிழ் அரசியவாதி!

Published

on

Loading

கிளிநொச்சி பிரபல பாடசாலையில் சிறுவர்களை சீரழிக்கும் நபர்; காப்பாற்ற நினைக்கும் தமிழ் அரசியவாதி!

 கிளிநொச்சி மாவட்டத்திஒல் அமைத்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விளையாட்டு ஆசிரியர்,  பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் பெற்றோர் தமது ஆதங்களை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisement

குறித்த நபர் ஆண் மாணவர்கள் பலரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

 பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு அதனடிப்படையில் பொலீஸாரின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்றைய தினம் (11) கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேவேளை  குறித்த ஆசிரியரை பிரபல தமிழ் அரசியல்வாதி ஒருவரும், பொலிசாரும் பாதுகாப்பதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுவரை 16 மாணவர்கள் குறித்த பயிற்றுனரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களின் வாழ்வு சீரழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் , இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.         

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன