Connect with us

இலங்கை

கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து!

Published

on

Loading

கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து!

அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், இன்று (12) காலை  கொஸ்கம, அளுத்தம்பலம் ரயில் கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

 விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

 ரயில் கடவை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​முச்சக்கர வண்டி ரயிலில் மோதியதில், முச்சக்கர வண்டியின் இயந்திரம் கழன்று பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.

விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநரும் மற்றொரு பெண்ணும் பின் இருக்கையில் பயணித்துள்ளனர். 

 காயமடைந்த இருவரும் அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

விபத்து நடந்த நேரத்தில் ரயில் கேட் மூடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

 மேலும், அந்த முச்சக்கர வண்டியை ரயில்வே கேட் கீப்பரின் தம்பி ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

images/content-image/1744410205.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன