இலங்கை
பயணிகளின் நன்மைக்காக விசேட தொலைபேசி இலக்கம்

பயணிகளின் நன்மைக்காக விசேட தொலைபேசி இலக்கம்
பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்கூறிய காலகட்டத்தில், 24 மணி நேரமும் பயணிகள் விபரங்களை அறிந்து கொள்ள 1955 என்ற ஹொட்லைன் எண் மற்றும் 071 2595555 என்ற வட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களைப் பெற, பஸ்கள் தொடர்பில் 1958 என்ற எண்ணையும், ரயில் விசாரணைகளுக்கு 1971 என்ற எண்ணையும் அழைக்கலாம்.