இலங்கை
பிரதமர் ஹரிணி அமரசூரிய மன்னிப்பு கேட்கவேண்டும்

பிரதமர் ஹரிணி அமரசூரிய மன்னிப்பு கேட்கவேண்டும்
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய , வடக்கின் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
இன்று (12) யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் மாவிட்டப்புரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பிரதமர் ஹரினி அமரசூரிய, அதன் போது பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலில் காலணிகளுடன் சென்ற விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை இருந்தார்.