இலங்கை
புத்தாண்டு விபத்துக்கள் மக்களுக்கு எச்சரிக்கை!!

புத்தாண்டு விபத்துக்கள் மக்களுக்கு எச்சரிக்கை!!
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாப்பாகச் செயற்பட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பட்டாசு வெடித்தல், வாணவேடிக்கைகளை மேற்கொள்ளல் என்பவற்றின் போது, அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் அதிகரிப்பதற்குச் சந்தர்ப்பங்கள் உள்ளதால் சிறுவர்கள் பாதிப்படையும் சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பதற்கு முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.