இலங்கை
மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு விநியோகம்

மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு விநியோகம்
கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான துண்டு சீட்டுகள் வழங்கும் பணிகள், மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் கடவுச்சீட்டு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த சேவை குறித்த நாட்களில் நண்பகல் 12 மணி வரை மாத்திரமே முன்னெடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஒரு நாள் சேவையின் கீழ் முன்னெடுக்கப்படும் 24 மணி நேரக் கடவுச்சீட்டு வழங்கும் சேவையானது குறித்த மூன்று நாட்களிலும் இடம்பெறாது எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.