Connect with us

இலங்கை

யாழில் வீதியோரமாக நண்பர்களுடன் நின்றவருக்கு நேர்ந்த துயரம்

Published

on

Loading

யாழில் வீதியோரமாக நண்பர்களுடன் நின்றவருக்கு நேர்ந்த துயரம்

  யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.

இந் நிலையில் வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisement

சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த 65 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

வயோதிபர் கடந்த 11ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் சைக்கிளை நிறுத்தி வைத்து வீதியோரமாக நின்று தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வயோதிபர் மீது மோதியுள்ளது.

Advertisement

விபத்தில் வயோதிபரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன