இலங்கை
உடற்பருமன் காரணமாக உயிரை மாய்த்த யுவதி!

உடற்பருமன் காரணமாக உயிரை மாய்த்த யுவதி!
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடற்பருமன் காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
29 வயதான அந்த யுவதி, மார்ச் மாதம் 23ஆம் திகதி தவறான முடிவெடுத்து கிருமி நாசினியை அருந்தியுள்ளார். இதையடுத்து, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்தார்.
வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார்.