இலங்கை
மோட்டார்சைக்கிள்கள் மோதி மூன்று பேருக்குப் படுகாயம்!

மோட்டார்சைக்கிள்கள் மோதி மூன்று பேருக்குப் படுகாயம்!
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேற்று நேருக்குநேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
பூந்தோட்டம் பாடசாலைத் திசையிலிருந்து வவுனியா நகரம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன், எதிர்த்திசையில் வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இரண்டு பெண்கள், ஒரு இளைஞர் உட்பட மூவரே காயமடைந்துள்ளனர்.
வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.