இலங்கை
அரசைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ளுராட்சிச் சபைகளில் கூட்டணி அமைக்க முடிவு!

அரசைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ளுராட்சிச் சபைகளில் கூட்டணி அமைக்க முடிவு!
எதிரணிகள் கொள்கையளவில் இணக்கம்
தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவலையை கட்டுப்படுத்தவதற்குரிய அரசியல் போரை முன்னெடுத்துவரும் எதிர்க்கட்சிகள், உள்ளுராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன.
இது தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகள் ஆரம்பக்கட்ட பேச்சுகளை ஆரம்பித்துள்ளன எனவும், கூட்டணி அமைப்பதற்கு கொள்கை அடிப்படையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மைபலம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்காது என எதிரணிகள் நம்புகின்றன. எனவேதான் உள்ளுராட்சிசபைகளின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சித்து வருகின்றன.