Connect with us

இலங்கை

ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வு நிறுத்தம்

Published

on

Loading

ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வு நிறுத்தம்

அதிபர் பதவியில் சேர்ந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை நிறுத்தி வைக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்,

Advertisement

சம்பள உயர்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஒரு அதிகாரி, தரம் II க்கு பதவி உயர்வு பெற திட்டமிடப்பட்ட திகதிக்குள் உரிய ஆங்கில மொழிப் புலமையைப் பெறத் தவறினால், பதவி உயர்வுக்கு திட்டமிடப்பட்ட திகதியிலிருந்து தாமதக் காலத்திற்குச் சமமான காலம் பதவி உயர்வு தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

பொது சேவை ஆணைக்குழு சுற்றறிக்கை எண் 08/2020 இன் படி, சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அல்லது தகுதிகளைப் பூர்த்தி செய்த அதிபர்களுக்கு இந்த முடிவு பொருந்தாது என்று அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவை விதிமுறைகளின்படி, அனைத்து அதிபர்களும் அரச மொழியான ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாய நிபந்தனையாகும்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன