இலங்கை
இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் ஐவர் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் ஐவர் உயிரிழப்பு!
டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நாட்டில் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்து வருவதனால் இவ்வார இறுதியில் பிராந்திய மட்டத்தில் டெங்கு ஒழிப்புத் திட்ட செயற்பாடுகளை பாடசாலைகளில் முன்னெடுக்கவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளதுடன் 2024ஆம் ஆண்டில் மொத்தமாக 49,870 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.