இலங்கை
கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடு!

கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடு!
புனித வார வழிபாடு ஆரம்பம்
வடக்கில் உள்ள பெரும்பாலான கத்தோலிக்க ஆலயங்களில் தற்போது பொலிஸாரையும், படையினரையும் உள்ளடக்கி சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தவக்காலத்தின் இறுதிப்பகுதியான புனித வார வழிபாடுகள் (பெரிய வியாழன்) நேற்று ஆரம்பமாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, பெரிய வெள்ளி வழிபாடுகள் இன்று மாலையும், உயிர்த்தஞாயிறு வழிபாடுகள் நாளை நள்ளிரவும், நாளைமறுதினம் காலையும் இடம்பெறவுள்ளன. இவற்றை முன்னிட்டே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.