Connect with us

இலங்கை

திஸ்ஸ விகாரையில் உள்ள அரசியல் நீக்கப்படவேண்டும்

Published

on

Loading

திஸ்ஸ விகாரையில் உள்ள அரசியல் நீக்கப்படவேண்டும்

தீர்வு கிட்டுவதற்கு அதுவே வழியாம் ஜனாதிபதி அநுர யாழில் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரையை மையமாக வைத்து, வடக்கிலும் தெற்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியலை நீக்கினால், இந்தப் பிரச்சினை மிக இலகுவாகத் தீர்வுகாண முடியும் – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
திஸ்ஸ விகாரை தொடர்பில் நான் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளேன். அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ஆலோசனைகளையும் நடத்தியுள்ளேன். உண்மையில் திஸ்ஸ விகாரை விவகாரம் மிக இலகுவாகத் தீர்க்கப்பட வேண்டியது. அந்த விகாரையை அடிப்படையாக வைத்து வடக்கிலும், தெற்கிலும் அரசியலாக்கப் பார்;கின்றனர். அந்த அரசியல் நீக்கப்படும் பட்சத்தில் விகாரை தொடர்பான பிரச்சினைக்கு, விரைவாகவும் இலகுவாகவும் நாங்கள் தீர்வைக் காணமுடியும். எனினும், விகாரைக்கான தீர்வை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் – என்றார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன