Connect with us

இலங்கை

தேவாலயங்களின் பாதுகாப்பபை அதிகரிக்க நடவடிக்கை

Published

on

Loading

தேவாலயங்களின் பாதுகாப்பபை அதிகரிக்க நடவடிக்கை

   உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கையில் தேவாலயங்களின் பாதுகாப்பபை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

நேற்றையதினம் (17) நடைபெற்ற விஷேட கூட்டத்தின் போதே இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்கு ம் தேவையான நடவடிக்கைகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளுமாறும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது ஏற்பட்ட இடையூறு மற்றும் துயரம் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் பிரதான நோக்கம் என்று பாதுகாப்பு செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன