இலங்கை
5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்திய பஞ்சாப்

5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்திய பஞ்சாப்
ஐ.பி.எல். தொடரின் 18ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்ரஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டிக்கான நாணய சுழற்சி மழை காரணமாக தாமதமான நிலையில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களை பெற்று பஞ்சாப் அணிக்கு 96 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி வெற்றியை தனதாக்கியது.