இலங்கை
சி.ஐ.டி.யில் ஆஜரானார் மைத்திரிபால சிறிசேன

சி.ஐ.டி.யில் ஆஜரானார் மைத்திரிபால சிறிசேன
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (21) காலை ஆஜராகியுள்ளார்.
அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.