இலங்கை
வேட்பு மனு நிராகரிப்பு – மேன்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி!

வேட்பு மனு நிராகரிப்பு – மேன்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி!
உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வடக்கில் உள்ள அரசியற் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் உள்ளடங்கலாக பல தரப்பாலும் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை, வலிகாமம் தெற்கு பிரதேசசபை, பருத்தித்துறை பிரதேசசபை, சாவகச்சேரி பிரதேசசபை, நல்லூர் பிரதேசசபை ஆகிய உள்ளூராட்சிச் சபைகளில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தரப்புகளும் இவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று இடம்பெற்றபோதே, போதிய அவகாசம் இல்லாதமையைக் காரணமாகக் கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.