Connect with us

இலங்கை

இலங்கையில் கட்டுப்பாட்டு விலையில் போத்தல் குடிநீர்

Published

on

Loading

இலங்கையில் கட்டுப்பாட்டு விலையில் போத்தல் குடிநீர்

  இலங்கையில் மே மாதம் முதல் நுகர்வோர் அந்த விலையில் போத்தல் குடிநீரை வாங்க முடியும் என்று குடிநீர் போத்தல்கள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிப்பதற்கு முன், தற்போதைய விலையில் பொருட்களை விற்பனை செய்ய குறைந்தபட்சம் ஒரு மாதமாவது அனுமதிக்கப்பட வேண்டும் என்றாலும், நுகர்வோர் விவகார ஆணையம் அவ்வாறு செய்யவில்லை என நிறுவனங்கள் கூறுகின்றன.

Advertisement

சமீபத்தில் அதிகாரசபைக்கும் போத்தல் குடிநீர் நிறுவனங்களுக்கும் இடையே நடந்த கலந்துரையாடலில், பல்பொருள் அங்காடிகள் ஊடாக 90 ரூபாய்க்கும் சாதாரண கடைகள் மூலம் ரூ.80 இற்கும் விற்கப்படும் என முடிவு எட்டப்பட்டது.

இந்நிலையில் திடீரென அந்த விலையை விடக் குறைவான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது நியாயமில்லை என்றும் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதேவேளை ஏப்ரல் 1, 2025 முதல் போத்தல் குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதாக மார்ச் மாத கடைசி வாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆணையம் தெரிவித்திருந்தது.

Advertisement

எனவே, விலைக் கட்டுப்பாட்டிற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட குடிநீர் போத்தல்களின் இருப்பை விற்றுவிட குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன