பொழுதுபோக்கு
உங்களிடம் கேட்பது இது மட்டும் தான்; உடல்நிலை குறித்த வதந்திக்கு நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம்

உங்களிடம் கேட்பது இது மட்டும் தான்; உடல்நிலை குறித்த வதந்திக்கு நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம்
தனது உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்தி தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகை பவித்ரா லட்சுமி, கடுமையான உடல்நிலை பிரச்சினைக்கு முறையான சிகிச்சை எடுத்து வருவதாக பதிவிட்டுள்ளார்.மாடலிங் செய்து வந்த பவித்ரா லட்சுமி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் பங்கேற்று பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. கோமாளியாக வந்த புகழுடன் இணைந்து இவர் செய்த சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பவித்ரா லட்சுமி வைல்டு கார் என்ட்ரி மூலம் மீண்டும் வந்து பைனலுக்கு முன்னறினார்.குக் வித் கோமாளி இவருக்கு நல்ல அறிமுகத்தையும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒரு வாய்ப்பையும் கொடுத்தது. மேலும் சினிமாவிலும் வாய்ப்பை பெற்று கொடுத்தது. அந்த வகையில் நடிகர் சதீஷ் நாயகனாக நடித்த நாய் சேகர் படத்தில், பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார்.சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இவருக்கு என்ன ஆச்சு முகம் இப்படி ஆகிவிட்டதே என்று கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனிடையே, தனது உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திக்கு விளக்கம் அளிக்கும் வகைளில் பவித்ரா லட்சுமி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதில்,என் தோற்றம் மற்றும் உடல் எடை குறித்து என்னைப் பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. எது தரப்பில் இருந்து இதற்கு பலமுறை விளக்கம் அளத்தும் இந்த வதந்திகள் நிற்கவிவல்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன், நான் இதைச் செய்தேன், அதை செய்தேன் என்பது போன்ற பல விஷயங்களைச் சொல்லி, ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது மிகவும் உணர்ச்சியற்றது. சில கருத்துக்கள் மிகவும் உணர்ச்சியற்றவை மற்றும் இதயமற்றவை, அது என்னவென்று கூட நான் குறிப்பிட விரும்பவில்லை.நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன், நான் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளேன், அதற்காக நான் சிகிச்சை பெற்று வருகிறேன், நான் நல்ல கைகளிலும் சரியான பராமரிப்பிலும் இருக்கிறேன். உண்மையான அக்கறையுடனும் அன்புடனும் இதைக் கேட்ட அனைவருக்கும் நன்றி, குறிப்பாக இந்த நேரத்தில் எனக்கு உலகம் என்று பொருள்.அனைத்து ஊடகங்களையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன், என் பெயரையும் நல்லெண்ணத்தையும் பணயம் வைத்து, உங்கள் பொழுதுபோக்குக்காக வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.A post shared by Pavithralakshmi (@pavithralakshmioffl)எனக்கு ஒரு வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை வழிநடத்த வேண்டும், ஏற்கனவே இருப்பதை விட எனக்கு கடினமாக இருக்க வேண்டாம். தயவுசெய்து, நீங்கள் அனுமதிக்காத ஒன்றை மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள், நான் உங்களிடம் கேட்டதெல்லாம் கொஞ்சம் மரியாதையும் அன்பும் மட்டுமே. இவ்வளவு நாட்களாக நீங்கள் எனக்குக் கொடுத்தது அவ்வளவுதான், தயவுசெய்து அதை இப்போது மாற்றாதீர்கள். உங்கள் பெண் விரைவில் திரும்பி வருவாள்’ என்று பதிவிட்டுள்ளார்.