பொழுதுபோக்கு
தேசிய கொடியுடன் வந்த ரசிகர்: திடீரென கோபப்பட்ட அஜித்; காரணம் இதுதான்!

தேசிய கொடியுடன் வந்த ரசிகர்: திடீரென கோபப்பட்ட அஜித்; காரணம் இதுதான்!
தன்னை பார்க்க தேசிய கொடியுடன் வந்த ரசிகர், செய்த செயலை பொறுத்துக்கொள்ள முடியதா அஜித், வேக வேகமாக சென்று தேசிய கொடியை பிடுங்கி, புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் முத்திரை பதித்து வரும் நிலையில், நடப்பு, ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அஜித்குமார் அணி 3 ஆவது இடம் பிடித்தது. சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற 12 ஆவது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3 ஆவது இடம் பிடித்தது.இதைத் தொடர்ந்து பெல்ஜியம் நாட்டில் ஸ்பா சர்க்யூட்டில் நடைபெற்ற ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்திலும் அஜித் கலந்துக் கொண்டார். இந்த கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 2-வது இடம் பிடித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய மோட்டார் விளையாட்டு துறைக்கு இது பெருமையான தருணம்” என்று குறிப்பிட்டிருந்தார்.முன்னதாக, இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜித், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அவர் பயிற்சி செய்யும்போது கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அஜித்துக்கு எந்த காயமும் இல்லை என்றாலும் காரின் முன்பகுதி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கார் பந்தயத்தில் பங்கேற்று வரும் அஜித், பெல்ஜியம், ஸ்பா சர்க்யூட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறும் இந்த பந்தயத்தில் அஜித் உட்பட 3 ஓட்டுநர்கள் காரை மாற்றி மாற்றி இயக்க இருந்தனர்.இதனிடையே ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் வெற்றி பெற்று 3-வது இடம் பிடித்த அஜித் ரசிகர்களுடன் சந்திப்பை நடத்தினார். அப்போது இந்திய தேசிய கொடியுடன் வந்த ஒரு ரசிகர் தேசிய கொடியை தலைகீழாக பிடித்திருப்பதை பார்த்த அஜித், வேக வேகமாக வந்து கொடியை அவரிடம் இருந்து பிடுங்கி நேராக வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், அஜித்தின் செயலை பார்த்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.