Connect with us

இலங்கை

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் ஒரே நாளில் 342 பேர் கைது

Published

on

Loading

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் ஒரே நாளில் 342 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (24) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 101 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 135 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 106 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 135 கிராம் 263 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 216 கிராம் 782 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 115 கிலோ 344 கிராம் கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன