இலங்கை
ஸ்ரீ தலதா வழிபாட்டு கடமையிலிருந்த இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த சோகம்

ஸ்ரீ தலதா வழிபாட்டு கடமையிலிருந்த இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த சோகம்
ஸ்ரீ தலதா வழிபாட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இவர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் தங்கள் மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துவதாக, பொலிஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.