Connect with us

இலங்கை

சிங்களவர்களுக்குப் பிறக்கின்ற பிள்ளைகளுக்குச் சத்தியலிங்கம் எனப் பெயர் வையுங்கள் ; ப.சத்தியலிங்கம்

Published

on

Loading

சிங்களவர்களுக்குப் பிறக்கின்ற பிள்ளைகளுக்குச் சத்தியலிங்கம் எனப் பெயர் வையுங்கள் ; ப.சத்தியலிங்கம்

சிங்களவர்களுக்குப் பிறக்கின்ற பிள்ளைகளுக்குச் சத்தியலிங்கம் எனப் பெயரை வையுங்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ‘ஆனையிறவு உப்பு விடயத்தில் பெயரைப் பார்க்க வேண்டாம். சுவையைப் பாருங்கள்’ என்று கூறியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே சத்தியலிங்கம் எம்.பி. மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

Advertisement

அவர் மேலும் தெரிவிக்கையில்,  உப்பில் ருசியைத்தான் பார்க்க வேண்டும். அதுதான் உண்மை. ஆனால், உங்களுக்குப் பிறக்கின்ற பிள்ளைகளுக்கும் சத்தியலிங்கம் என்று பெயரை வையுங்கள்.

ஏன் ரத்நாயக்கா, விமல் வீரவன்ச, எனப் பெயரை வைக்கின்றீர்கள். சத்தியலிங்கம், சுந்தரலிங்கம், பொன்னம்பலம் என உங்களது பிள்ளைகளுக்கும் பெயரை வையுங்கள்.

ஏன் என்றால் உங்களுக்குப் பிள்ளைதானே வேண்டும். பெயர் முக்கியமில்லைதானே. அதற்குப் பின்னர் நாங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன