இலங்கை
நாட்டின் வானிலையை பாதிக்கும் வெப்பமண்டலம் – பல பகுதிகளிலும் மழை!

நாட்டின் வானிலையை பாதிக்கும் வெப்பமண்டலம் – பல பகுதிகளிலும் மழை!
வெப்பமண்டல ஒருங்கிணைப்பு மண்டலம் நாட்டி ன் வானிலையை பாதித்து வருவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இன்று (27) மாலை அல்லது இரவில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
லங்கா4 (Lanka4)
(வீடியோ VIDEO)
அனுசரணை