Connect with us

இலங்கை

சமூக ஊடகங்களில் பரவிய காணொளி; காதலியுடன் சென்ற மேலாளர் நையப்புடைப்பு

Published

on

Loading

சமூக ஊடகங்களில் பரவிய காணொளி; காதலியுடன் சென்ற மேலாளர் நையப்புடைப்பு

நடுவீதியில் வைத்து தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவரை தாக்கிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வந்தமை தொடர்பில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் கிரிபத்கொடை நகரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

மாகொல மற்றும் களனி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 22 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைனஞர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நடுவீதியில் இளைஞர்கள் இருவர் இணைந்து நபரொருவரை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

அது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கிரிபத்கொடை நகரத்தில் அந்த சம்பவம் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது.

Advertisement

மேலதிக விசாரணைகளில், தாக்குதலுக்குள்ளானவர் தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான தனியார் நிறுவன உரிமையாளர் வேலை நிமித்தம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவருடன் தனது காரில் சென்றுள்ளார்.

இது தொடர்பில் பெண்ணின் காதலனுக்கும் தனியார் நிறுவன உரிமையாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனையடுத்து பெண்ணின் காதலன் மற்றுமொரு இளைஞனுடன் இணைந்து தனியார் நிறுவன உரிமையாளரை கிரிபத்கொடை நகரத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை (26) பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான காதலனும் இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன