இலங்கை
தங்கத்தை இடுப்பில் வைத்து கடத்தியவர் விமானநிலையத்தில் கைது

தங்கத்தை இடுப்பில் வைத்து கடத்தியவர் விமானநிலையத்தில் கைது
துபாயிலிருந்து சுமார் ரூ.63 மில்லியன் மதிப்புள்ள இரண்டு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை கடத்த முயன்ற இங்கிலாந்து நாட்டவர் ஒருவர் விமானநிலையத்தில் கைதாகியுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஃப்ளை டுபாய் FZ 569 விமானத்தில் பயணி நாட்டிற்கு வந்து, தங்கத்தை இடுப்பில் மறைத்து வைத்திருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.