Connect with us

சினிமா

ஜேசன் சஞ்சய் எடுத்த விபரீத முடிவு..! தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்துமா..?

Published

on

Loading

ஜேசன் சஞ்சய் எடுத்த விபரீத முடிவு..! தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்துமா..?

தமிழ் சினிமா உலகில் இயக்குநராக அறிமுகமான ஜேசன் சஞ்சய் தற்போது மிகப்பெரிய திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். நடிகர் தளபதி விஜயின் மகனான ஜேசன் சஞ்சய், முதன் முறையாக இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். அந்தவகையில், இவர் எடுத்திருக்கும் துணிச்சலான முடிவுகள் தற்போது தமிழ் திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.ஜேசன், தற்போது Joseph Media என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இதில் தனது முதல் படத்தை 25 கோடி முதலீட்டில் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன் இப்படத்தில் சுதீப் கிசான் என்பவரை நடிகராகத் தெரிவுசெய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு முதல் படத்திற்கு இப்படியொரு பெரிய அளவிலான முயற்சி எடுக்கிறார் என்பதன் மூலம் ஜேசன் படம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அறியமுடிகிறது. திரையுலக வட்டாரங்களில் பரவும் தகவல்படி, ஜேசன் சஞ்சய் தனது கதையை சில முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அவர்கள் யாரும் ஜேசனின் படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்பதனாலேயே இந்த விபரீத முடிவு எடுத்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன