Connect with us

உலகம்

“பயங்கரவாதத்தை இலங்கை ஒருபோதும் ஆதரிக்காது”  – இலங்கை

Published

on

Loading

“பயங்கரவாதத்தை இலங்கை ஒருபோதும் ஆதரிக்காது”  – இலங்கை


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 08/05/2025 | Edited on 08/05/2025

 

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நேற்று நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமானது மட்டுமல்லாமல் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய இந்த தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு குழந்தைகள், பெண்கள் என 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எதிர்பாராதவிதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில், 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர். பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதனிடையே பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பல நாடுகள் குரல் கொடுத்து வருகிறது. அந்த வகையில், பயங்கரவாதத்தை இலங்கை ஒருபோதும் ஆதரிக்காது என்றும், அதற்கு எதிரான முயற்சிகளுக்கு ஆதரவு என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை உற்றுநோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • பேருந்து கவிழ்ந்து விபத்து; 21 பேர் உயிரிழப்பு

  • ‘தெளிவான செய்தியை சொல்லிவிட்டோம்; இன்று இரவும் காத்திருப்போம்’-முப்படை அதிகாரிகள் கூட்டாக பேட்டி

  • ‘மத்தியஸ்தம் தேவையில்லை’- நிராகரித்த மோடி

  • ‘வேலை நாட்களை ஒன்றிய அரசு குறைத்து விட்டது’-அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

  • பாமக மாநாடு; அச்சரப்பாக்கத்தில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து நெரிசல்

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன