இலங்கை
யாழின் பல பகுதிகளில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

யாழின் பல பகுதிகளில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டுள்ளார்.
அதேநேரம், யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரினது உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.