இந்தியா
இந்தியா – பாக்., இடையே டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முயன்றார், ஆனால் மூன்றாம் நாடு தலையிட அவசியமில்லை: மத்திய அமைச்சர்

இந்தியா – பாக்., இடையே டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முயன்றார், ஆனால் மூன்றாம் நாடு தலையிட அவசியமில்லை: மத்திய அமைச்சர்
Damini Nathகடந்த வாரம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது, இந்தநிலையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கான மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புதன்கிழமை கூறுகையில், டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முயன்றாலும், மூன்றாவது நாடு தலையிட வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்மே 10 அன்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த ராம்தாஸ் அத்வாலே, ஒரு செய்தியாளர் சந்திப்பில், “டொனால்ட் டிரம்ப் ஜி மத்தியஸ்தம் செய்ய முயன்றார். மோடி ஜி டொனால்ட் டிரம்புடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்த மூன்றாவது நாடும் வர வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்.பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை தொடர்பு கொண்ட பிறகு துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மீண்டும் கூறிய ஒரு நாள் கழித்து மத்திய அமைச்சரின் கருத்துக்கள் வந்துள்ளன. போர் முடிவுக்கு வந்தால் அமெரிக்காவுடன் இரு நாடுகளும் இடையே நிறைய வர்த்தகம் செய்ய வாய்ப்பிருக்கும் என்று இரு தரப்பினரிடமும் கூறியதாக டிரம்ப் கூறியிருந்தார்.இருப்பினும், “மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதிலிருந்து மே 10 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நிறுத்தம் மற்றும் இராணுவ நடவடிக்கை குறித்த புரிதல் வரை, இந்திய மற்றும் அமெரிக்கத் தலைவர்களிடையே அதிகரித்து வந்த இராணுவ மோதல் குறித்து உரையாடல்கள் நடந்தன. இந்த விவாதங்களில் எதிலும் வர்த்தகப் பிரச்சினை எழவில்லை” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.இதற்கிடையில், இந்தியா அமைதியை விரும்பும் அதே வேளையில், பாகிஸ்தானில் இருந்து சுடப்படும் எந்தவொரு தோட்டாக்களுக்கும் அதே பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார், இது குண்டுகளுக்கு குண்டுகளால் பதிலடி கொடுக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றை எதிரொலிக்கிறது.”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குத் திரும்பும்போதுதான் பயங்கரவாதம் முடிவுக்கு வரும் என்று நான் இதற்கு முன்பு பலமுறை கூறியுள்ளேன்,” என்று ராம்தாஸ் அத்வாலே கூறினார்.அரசாங்கத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, “பல ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. 1998 இல் நான் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பினேன்” என்று ராம்தாஸ் அத்வாலே கூறினார்.ஒவ்வொரு சாதியினரின் மக்கள் தொகை, அவர்களின் வேலைவாய்ப்பு நிலை மற்றும் அவர்களுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்க முடியும் என்பதை அறிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டதாக ராம்தாஸ் அத்வாலே கூறினார்.