இலங்கை
இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; வீட்டிலிருந்த இளம் தாய்க்கு நேர்ந்த கதி

இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; வீட்டிலிருந்த இளம் தாய்க்கு நேர்ந்த கதி
மாத்தளையின் கந்தேனுவர உடங்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை பெண் ஒருவர் கத்தியால் குத்திப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டார்.
இறந்த பெண் 29 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் என்றும், சடலம் மாத்தளை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கந்தேனுவர பொலிசார் தெரிவித்துள்ளனர்.