இலங்கை
பாடசாலைகளில் பாலியல் குற்றமா…அழைக்கவும் 1929

பாடசாலைகளில் பாலியல் குற்றமா…அழைக்கவும் 1929
பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் குற்றங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும். எனவே, பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றால் பாடசாலை அதிபர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு வழங்க முடியும் என்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் கூறியுள்ளது.
பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் http://ncpa@childprotection.gov.lkஎன்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடு அளிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.