Connect with us

இலங்கை

15 வயதுச்சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

Published

on

Loading

15 வயதுச்சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

15 வயதான குறித்த  சிறுமி, 5 மாத கர்ப்பமான நிலையில் , சிகிச்சைக்காக  யாழ் . போதனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Advertisement

இதன்போது  குறித்த  சம்பவம் தொடர்பில் மருத்துவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து,  பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இதேவேளை அந்தநபர் சிறுமியை நீண்ட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன