இலங்கை
மண்டைதீவில் வீடொன்றில் பணம், நகைகள் திருட்டு!

மண்டைதீவில் வீடொன்றில் பணம், நகைகள் திருட்டு!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு 6ஆம் வட்டாரப் பகுதியில், சுமார் 4 லட்சம் ரூபா பணமும், வெளிநாட்டு நாணயங்களும், நகைகளும் திருடப்பட்டுள்ளன.
மண்டைதீவு – 6ஆம் வட்டாரம் பகுதியிலேயே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸார் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.