இலங்கை
யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு!

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு!
இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் சங்கானை நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில், முன்னாள் போராளியான ஜெயசீலன் என்பவர் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்தார். அதன்பின்னர் இறுதி போரில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜெயந்தன், கந்தையா இலங்கேஸ்வரன், ஜெசிந்தன், ஆதவன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.