இலங்கை
மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை கோரிக்கை

மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை கோரிக்கை
இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில்,
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இலங்கை மின்சார சபைக்கு பாரிய நஷ்டம் ஏற்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்ய மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதி முடிவு ஜூன் மாதம் முதல் வாரத்தில் எடுக்கப்படும் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.