Connect with us

இலங்கை

ஆறு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published

on

Loading

ஆறு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

  நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது.

இந்த மண்சரிவு எச்சரிக்கை நாளை (19) காலை 10:00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் (NBRO) தெரிவித்துள்ளது.

Advertisement

அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்படும், முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு

Advertisement

சீதாவாக்கை பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்

காலி

Advertisement

எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்


களுத்துறை

பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் பாலிந்தநுவர

Advertisement

கண்டி

பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்

Advertisement


கேகாலை

புலத்கோஹுபிட்டிய, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் வரக்காபொல பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்


இரத்தினபுரி

Advertisement

எஹெலியகொட, கிரி எல்ல மற்றும் குருவிட்ட பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கே இவ்வாறு மண சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன