இலங்கை
இலங்கையில் நோர்வே பிரஜைக்கு நேர்ந்த துயரம்

இலங்கையில் நோர்வே பிரஜைக்கு நேர்ந்த துயரம்
ஹிக்கடுவ கடற்கரையில் காணாமல் போனவரின் சடலம் வேவெல கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (18) ஹிக்கடுவ கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நபரின் சடலம் வேவெல கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், நோர்வே நாட்டைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
உயிரிழந்தவர் தனது சகோதரருடன் ஹிக்கடுவ கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தபோது, கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.