இலங்கை
தேசபந்து முன்வைத்த சட்டக் குழு ஆட்சேபனைகளை நிராகரித்த விசாரணைக் குழு

தேசபந்து முன்வைத்த சட்டக் குழு ஆட்சேபனைகளை நிராகரித்த விசாரணைக் குழு
காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் சட்டக் குழு முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை விசாரணைக் குழு நிராகரித்துள்ளதாக, நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும், 23 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை விசாரணைக் குழு வழங்கியுள்ளது
அதற்கமைய, மேலதிக விசாரணைக்காக,
எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடுவதற்குக் குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன், அவரது பதவி துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை அளிப்பதற்கு நியமிக்கப்பட்ட, விசாரணைக் குழுவில் இன்று பிற்பகல் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.