இலங்கை
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு இலங்கைக்கு!

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு இலங்கைக்கு!
தொழில்துறைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெட்ரிக் டன் உப்புத் தொகை நாளை இலங்கையை வந்தடையும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுவதாகவும்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் உப்பு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம் என லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தனதிலக தெரிவித்துள்ளார்.
இதுதான் அவர்களை அதிகளவில் உப்பை கொள்வனவு செய்ய வழிவகுத்துள்ளதாகவும், இதனால் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.[ஒ]