பொழுதுபோக்கு
OTT Release: துப்பறியும் போலீஸ் முதல் தந்தை, மகன் பாசம் வரை: இந்த வாரம் ஒடிடி தளத்தில் ரிலீசாகும் மலையாள திரைப்படங்கள்!

OTT Release: துப்பறியும் போலீஸ் முதல் தந்தை, மகன் பாசம் வரை: இந்த வாரம் ஒடிடி தளத்தில் ரிலீசாகும் மலையாள திரைப்படங்கள்!
மலையாள சினிமா அதன் தனித்துவமான கதை சொல்லும் திறமையால் உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அதேபோல் மலையாள திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய நிலையில், அந்த படங்கள் எப்போது ஒடிடி தளத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். அந்த வகையில், இந்த வாரம், அதாவது மே 19 முதல் மே 25, 2025 வரை, வெளியாக உள்ள 4 முக்கிய மலையாளத் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.பவானா முதன்மை கேரக்டரில் நடித்துள்ள ‘ஹன்ட்’ திரைப்படம் ஒரு பரபரப்பான தடயவியல் மருத்துவரின் கதையாகும். கீர்த்தி என்ற தடயவியல் மருத்துவர் ஒரு கொலையின் மர்மத்தை துப்பறியும் போது, பல வருடங்களுக்கு முன்பு இறந்த டாக்டர் சாரா தான் கொலை செய்யப்பட்டவர் என்ற அதிர்ச்சியான உண்மையை அறிகிறார். கீர்த்தி மேலும் விசாரிக்கையில், சாரா மரணத்திற்குப் பிறகும் ஏதோ ஒரு வகையில் அவளுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாள் என்பதை உணர்கிறாள். இந்தத் திரைப்படம் மர்மம் மற்றும் உளவியல் பதற்றத்தை ஒருங்கே கலந்து வழங்குகிறது. ரேவதி பனிக்கர், அஜ்மல் அமீர், சாந்துநாத், அனு மோகன் மற்றும் அதிதி ரவி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மே 23, 2025 அன்று மனோரமா மேக்ஸ் (ManoramaMAX) தளத்தில் வெளியாகிறது.ஷம்சு சய்பா இயக்கிய ‘அபிலாஷம்’ திரைப்படத்தில் சாஜூ குருப் ஒரு காதல் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ1.08 கோடி வசூல் செய்தது. விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பைப் பெற்ற இப்படம் இப்போது டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் பிரைம் வீடியோவிலும், வெளிநாடுகளில் சிம்ப்ளி சவுத் தளத்திலும் மே 23, 2025 முதல் இப்படத்தைக் காணலாம். இது ஒரு இனிமையான காதல் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜிஷ்ணு ஹரிந்திர வர்மா இயக்கிய இந்த காதல் நாடகத்தில் ஜிஜு என்ற இளைஞன் உயர் சாதியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணைக் காதலிக்கிறான். இவர்களது காதலுக்கு சந்தியாவின் உறவினரான சதீஷ் (சித்தார்த் பரதன்) கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். 1990-களின் மலையாள காதல் கதைகளின் சாராம்சத்தை இப்படம் அழகாகப் பிரதிபலிக்கிறது. இது ஒரு ஏக்கத்தைத் தூண்டும் அதே நேரத்தில் சமூக உணர்வுள்ள கதையாகும். இப்படம் தற்போது மனோரமா மேக்ஸ் தளத்தில் (ManoramaMAX) ஸ்ட்ரீமிங் ஆகிறது.மே 9, 2025 அன்று வெளியான உசுப்பிண்டே ஒசையாது (‘Ouseppinte Osiyathu’) திரைப்படம் ஒரு தந்தைக்கும் அவரது மகன்களுக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவுகளைப் பேசுகிறது. எதிர்பாராத ஒரு நிகழ்வு குடும்பத்தில் புதைந்து கிடந்த டெனஷன்களை வெளிக்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, குடும்பத்தினர் தங்கள் கடந்த காலத்தை எதிர்கொண்டு, ஒருவரை ஒருவர் மன்னித்து, மீண்டும் ஒன்று சேர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். அன்பு, இழப்பு மற்றும் குடும்ப பந்தங்களின் வலிமை ஆகியவற்றை இப்படம் ஆழமாக ஆராய்கிறது. இப்படம் தற்போது பிரைம் வீடியோ தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.இந்த வாரம் வெளியாகவுள்ள இந்த 4 திரைப்படங்களும் தனித்துவமான கதைக்களத்தையும், சிறந்த நடிகர்களின் நடிப்பையும் கொண்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.