Connect with us

உலகம்

அமெரிக்கா முன்மொழிந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உச்ச தலைவர் அதிருப்தி!

Published

on

Loading

அமெரிக்கா முன்மொழிந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உச்ச தலைவர் அதிருப்தி!

அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட கடுமையாக முயற்சித்து வருகிறது.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளைத் தொடர முடிவு செய்தனர்.

Advertisement

இருப்பினும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட ஆரம்ப திட்டத்தில் அவர் அதிருப்தி தெரிவித்தார். அமெரிக்க திட்டம் தனது நாட்டின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது என்றும்

“நாடு நூறு அணு மின் நிலையங்களை கட்டினாலும், அந்த நாடு பொருளாதார செழிப்பை அடையவில்லை என்றால், அந்த ஆலைகளால் எந்தப் பயனும் இருக்காது. மீண்டும் நிதியுதவிக்காக அமெரிக்காவை அணுக வேண்டியிருக்கும்” என்று கமேனி கூறினார்.இருப்பினும், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அவர் முழுமையாக நிராகரிக்கவில்லை. 

அமெரிக்காவால் வழங்கப்பட்ட திட்டத்தில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பான அம்சங்களை வலியுறுத்தி உள்ளதாகவும்

Advertisement

ஈரானின் எரிசக்தி சுதந்திரதுடன் இருப்பதற்கு யுரேனியம் செறிவூட்டல் முக்கியமானது. ஈரான் யுரேனியன் செறிவூட்டல் செய்ய வேண்டுமா இல்லையா என்பதில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? நீங்கள் எந்தக் கருத்தையும் கூற முடியாது.

சுதந்திரம் என்பது அமெரிக்கா போன்றவர்களிடமிருந்து பச்சைக்கொடிக்காகக் காத்திருக்கக் கூடாது. சிலர் பகுத்தறிவு என்றால் அமெரிக்காவிற்கு பணிந்து அடக்குமுறை சக்திக்கு சரணடைவது என்று நினைக்கிறார்கள்; இது பகுத்தறிவு அல்ல” என்று தெரிவித்தார்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன