Connect with us

இந்தியா

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகின்றது பாகிஸ்தான்!

Published

on

Loading

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகின்றது பாகிஸ்தான்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலை  அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

தனது ஈரான் பயணத்தின் போது, காஷ்மீர், பயங்கரவாதம், நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

இதுதொடர்பாக ஈரான் ஜனாதிபதி  மசூத் பெஷேஷ்கியனுடன் தெஹ்ரானில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்;

காஷ்மீர் பிரச்சினை மற்றும் நீர் பிரச்சினை உட்பட அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம், மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து நமது அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்.

சமாதான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்கள், உண்மையிலேயே அமைதியை தீவிரமாகவும் உண்மையாகவும் விரும்புகிறார்கள் என்பதைக் காண்பிப்பார்கள். இந்தியாவுடனான மோதலில் இருந்து எங்கள் நாடு வெற்றி அடைந்ததுள்ளது என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன