Connect with us

டி.வி

அருண் ராங்கி பிடிச்சவன்.! பிடிவாதமாக நிற்கும் முத்து.. ரவியை மடக்க திட்டமிடும் நீத்து.!

Published

on

Loading

அருண் ராங்கி பிடிச்சவன்.! பிடிவாதமாக நிற்கும் முத்து.. ரவியை மடக்க திட்டமிடும் நீத்து.!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து சீதா கிட்ட அந்தப் பொண்ணுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அதுக்கு சீதா அந்த பொண்ணுக்கு உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்ல நல்லா இருக்கிறாள் என்று சொல்லுறார். அதனை அடுத்து மீனா முத்துவைப் பாத்து அந்தப் பொண்ணு பாவம் விருப்பப்பட்டவனை கல்யாணம் பண்ணனும் என்று இப்படி ஒரு முடிவெடுத்திருக்கு அவங்க கிட்ட சொல்லுங்க விருப்பபட்டவனை கல்யாணம் பண்ணினாத் தான் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று எடுத்துச் சொல்லுங்க என்கிறார்.அதுக்கு முத்து அது அவங்க குடும்ப விஷயம் நாம யாரு இதைப் பற்றிக் கதைக்க என்று சொல்லுறார். மேலும் மீனாவைப் பாத்து சீதாவை கவனமாக பாத்துக்கோ என்கிறார். இதனை அடுத்து விஜயா, பார்வதியைக் கூட்டிக் கொண்டு நீத்துவோட ரெஸ்டாரெண்டுக்குப் போய் நிற்கிறார். அங்க விஜயா நீத்துவைப் பாத்து வேலை எல்லாம் செய்யுறது சரி எப்ப கல்யாணம் பண்ணிக்கப்போற என்று கேட்கிறார். அதுக்கு நீத்து இப்போதைக்கு ஐடியா இல்ல என்கிறார்.இதனை அடுத்து முத்துவோட friend மீனா அம்மா கிட்ட போய் அந்த அருண் உண்மையிலேயே ராங்கி பிடிச்சவன் சீதாவை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சால் அவளோட வாழ்க்கை வீணாக போயிடும் என்று சொல்லுறார். அந்த நேரம் பாத்து முத்து வந்து ஏன் அத்தை இந்த வெயிலுக்கால திரியுறீங்க என்று கேட்கிறார்.பின் முத்து அந்த அருண் நல்லவன் இல்ல அவனுக்கு சீதாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேணாம் என்று மீனாவோட அம்மாவுக்குச் சொல்லுறார். இதனை அடுத்து விஜயா ஸ்ருதி கிட்ட போய் இனிமேல் ரவியை நீத்துவோட ஹோட்டலில வேலை செய்யவேணாம் என்று சொல்லு என்கிறார். அதுக்கு ஸ்ருதி ஏன் அப்புடி சொல்லுறீங்க என்று கேட்கிறார். அதுக்கு விஜயா நீத்து தனக்கு வாற மாப்பிள்ளை ரவி மாதிரி வரணும் என்று சொல்லுறார் அதுதான் நான் அப்படி சொன்னேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன